* ‘‘இன்னும் ஒரு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கிறேன். ஹாங்காங்கை 9 அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்க வேண்டும், புதிய பந்தில் மேலும் சிறப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு புதிய பந்து ஸ்விங் ஆகவில்லை. இதை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். வலைப்பயிற்சியில் எங்களின் தவறுகளை முழுமையாக தீர்ப்போம். எங்களின் முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும். எனவே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூன்றிலும் முழு திறமையை வெளிப்படுத்துவோம். துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவதே எங்களின் ஆட்ட சூட்சமம்’ என இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஷ் அகமது கூறி உள்ளார்.