புதுடெல்லி: டெல்லியின் நரேலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதக் என்ற (28) ரயில்வே ஊழியர் நரேலா-ரத்தானா ரயில்வே கேட்டில் பணியில் இருந்தார். அப்போது, மூரி எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்ததால் கேட்டை மூடி வைத்திருந்தார். இந்தசமயத்தில் அங்கு மோட்டார் ைசக்கிளில் வந்த கும்பல் ஒன்று ரயி்வே கேட்டை திறந்து விடுமாறு ஊழியர் பதக்கை மிரட்டினர். ஆனால், எக்ஸ்பிரஸ் ரயில் வருகையின் காரணமாக திறந்துவிட மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், கத்தியால் பதக்கின் இரு கைகளையும் வெட்டி துண்டாக்கியது. அவரை அந்த பகுதியினர் மீட்டு ரோஹினி மருத்துவமனையில் சேர்த்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.