காவலர் மீது கல்வீச்சு: 2 பேர் கைது

துரைப்பாக்கம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் பாலவாக்கம் பல்கலைநகர் பகுதி கடலில் கரைக்கப்பட்டன.  பாலவாக்கம், பல்கலைநகர் பிரதான சாலையில் போலீஸ்காரர் ஜெயக்குமார் உள்பட பலர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு போதையில் வந்த 2 வாலிபர்கள், போலீஸ்காரர் ஜெயக்குமாரை இடித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட ஜெயக்குமார் மீது  கற்களை வீசிவிட்டு போதை வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் (30), தீனா (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: