133 சவரன் கொள்ளை: 5 பேருக்கு போலீஸ் காவல்

பல்லாவரம்: பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன் (56). தனியார் வங்கி மேலாளர். கடந்த 9ம் தேதி மாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கும்பல் கத்திமுனையில் அனைவரையும் கட்டிப்போட்டு, 133 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக, வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண் மகாராணி, நாகப்பட்டினம் அருண்குமார் (30), மதுரை செல்வம் (28), சுரேஷ் (26), உசிலம்பட்டி கவுதம் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, வரும் 21ம் தேதி வரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: