மதவாத பாஜ அரசை வீழ்த்த வேண்டும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  நீதிமன்றத்தையும் காவல் துறையையும் தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது சட்டப்படி உரிய நடவடிக்கையை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.  ராஜிவ் காந்தி, போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என 14 பேரை கொலை செய்தவர்களை விடுவிக்கக்கூடாது என்பதுதான் எங்களது நிலை. ஆனாலும், இப்பிரச்னையால் எங்களது கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது. எங்களுடைய முக்கிய கொள்கை, மதசார்பற்ற இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். ஊழல், மதவாத கட்சியான பாஜ அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: