மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37ஆயிரத்து 755ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 99 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11 ஆயிரத்து 416 ஆக இருந்தது.