தென்மேற்கு பருவமழைக்கு பிறகு குமரியில் ரப்பர் பால் உற்பத்தி தொடக்கம்

குலசேகரம்: தென்மேற்கு பருவழைக்கு பிறகு குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ரப்பர் விவசாயம் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதியில்  ரப்பர் விவசாயத்தை  நம்பியே தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து, தினமும் 250 டன் ரப்பர் உற்பத்தியாகி வருகிறது. ஒரு கிலோ ரப்பர் ₹130க்கு விலை போகிறது. இதனால் தினமும்  சுமார் ₹32 கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதித்தது. இதனால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி  பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரப்பர் பால் உற்பத்தி அதிக அளவு உள்ளது.  தினமும் சுமார் 250 டன் ரப்பர் பால் உற்பத்தியாகி வருவதாக ரப்பர் விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால்  தொழிலாளர்கள், ரப்பர் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: