சென்னை : பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சென்னை சிறுவனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு இடையேயான சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றன.இந்தப் போட்டியில் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தவிஷ் என்ற 5 வயது சிறுவன் பங்கேற்று விளையாடினான். பல்வேறு ரவுண்டுகள் கொண்ட சுற்றில் தேர்வான தவிஷ் இறுதியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றான். வெற்றி பெற்ற சிறுவன் நேற்று சென்னை திரும்பினான். விமானநிலையத்தில் சிறுவன் தவிஷூக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.