சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்களில் ஒரசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி