×

கொரட்டூரில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி : மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்

சென்னை : சென்னை கொரட்டூர் அக்ராகரம் சாலையில் சென்ற மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சரோஜா என்ற மூதாட்டியிடம் 6 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றனர். அப்போது சரோஜா கூச்சலிட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை துரத்தி  பிடித்தனர்.

பின்னர் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனை. கொரட்டூர் காவல்துறையினர் அந்த நபரை விசாரித்ததில் அவர்கள் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் கார்த்திக் என்று தெரியவந்தது. இந்நிலையில் சேகர் மற்றும் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,jewelery ,korattur, public,slap
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...