×

இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர்: திமுக தலைமை செயற்குழுவில் புகழாரம்

சென்னை: திமுக செயற்குழு அவசர கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக செயற்குழு அவசர கூட்டம் இன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை  தாங்குகிறார்.

பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள். சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கலைஞர் மறைவுக்கு இரங்கல்

கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விளக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினர். மாபெரும் அரசியல் தலைவராக கலைஞர் பன்முக திறமை கொண்டவர் என்று பாராட்டினர்.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க காரணமாக இருந்தவர் கலைஞர் என்றும், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் சட்ட ரீதியான தீர்வுக்கு வழிவகுத்தவர் கலைஞர் என்றும் இரங்கல் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் ஆட்சியில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் கலை, அறிவியல் கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர் என்றும், பல்கலைக்கழங்களை உருவாக்கி கல்வியில் புரட்சியை கொண்டு வந்தவர் கலைஞர் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞருக்கு மவுன அஞ்சலி

கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக செயற்குழுவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK, Executive Meeting, MK Stalin, Anna Arivalayam
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...