×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தந்தை, மகன் பரிதாப சாவு: மறைமலைநகர் அருகே சோகம்

சென்னை: மறைமலைநகர் அருகே மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் மன்னார் (52). இவர், தனது குடும்பத்துடன் மறைமலைநகர் அடுத்த வல்லாஞ்சேரி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி, செங்கல்பட்டு அடுத்த ரெட்டிபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மகன் பாலாஜி (30), சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். தினசரி காலை வீட்டில் இருந்து மொபட்டில் செங்கல் சூளைக்கு புறப்படும் மன்னார், தனது மகனை உடன் அழைத்து சென்று மறைமலைநகர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை வழக்கம்போல் தந்தையும், மகனும் வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டனர். பாலாஜி மொபட்டை ஓட்டினார். மன்னார் பின்னால் அமர்ந்து சென்றார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி அருகே சென்றபோது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், சம்பவ இடத்திலேயே மன்னார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பாலாஜி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், பாலாஜியை சிகிச்சைக்காகவும், மன்னார் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜியும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனத்தை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தையும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vehicle collided,father,son,death,tragedy,
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...