×

அயனாவரம் சிறுமி பலாத்கார விவகாரம் போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு தொடர்பான ஜாமீன் மனுக்கு போலீஸ் பதிலளிக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம், பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்ச் மேன், லிப்ட் மேன், வாட்டர் மேன் என பலரும் சேர்ந்து, அதேகுடியிருப்பில் உள்ள 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு போதை மாத்திரை மற்றும் மயக்க ஊசி போட்டு பல மாதங்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 17 பேரும் ஜாமீன் வழங்க்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, வழக்கு குறித்து அயனாவரம் மகளிர் காவல் நிலையம் சார்பில் விசாரணை அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court,ordered,police,allegations,rape
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...