×

2 வாலிபர்கள், கம்பெனி அதிபருக்கு வெட்டு

சென்னை: அம்பத்தூர் அருகே 2 வாலிபர்கள் மற்றும் கம்பெனி அதிபருக்கு சரமாரி வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் அடுத்த கருக்கு, பழைய தெருவை சேர்ந்தவர் கந்தவேல் (28). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் சதீஷ் (32). இருவரும் கூலித்தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இருவரும் கருக்கு, ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் கந்தவேல், சதீஷ் ஆகியோரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தவேல், சதீஷ் ஆகிய இருவரின் தலையில் சரமாரியாக வெட்டினர். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததை பார்த்து பைக்கில் வந்த 2 ஆசாமிகளும் பைக்கில் தப்பி சென்றனர்.

படுகாயம் அடைந்த சதீஷ், கந்தவேல் ஆகிய இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அஹ்ரகார மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்பத் (21). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் இரவு சம்பத் வீட்டில் இருந்து காரில் நண்பர்களை பார்க்கச்சென்று கொண்டிருந்தார். இவர் அதே பகுதி பெருமாள் கோயில் அருகே வந்தபோது எதிரில் பைக்கில் 2 பேர் வந்தனர். அப்போது, அவர்களுக்குள் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் வந்த 2 பேர் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காருக்குள் இருந்த சம்பத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* பல்லாவரம், ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (39). ஆட்டோ டிரைவர். நிரந்தர குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாய்த்தகராறும், அடிதடியும் நடைபெற்று வந்தது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் குரோம்பேட்டையில் மாநகர போக்குவரத்து பயிற்சி வளாகத்தில் போலீசாரால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் வலதுபுற கண்ணாடி கம்பியில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருப்பவர் ஏஞ்சலோ இருதயசாமி (53). இவர் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாகராஜ் என்ற மற்றொரு அதிகாரியுடன் வந்தார். தாம்பரம் அடுத்த அகரம்தென் சாலையில் வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு கார், இவர்களின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

* ஆவடி அடுத்த திருநின்றவூர், அபிராமி நகர் 2வது தெருவை சேர்ந்த ரமேஷ்பாபு (45) என்பவரது வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் நகைகளை திருடிய வேப்பம்பட்டு, பஜனை கோயில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (28), நெமிலிச்சேரி, நாத் தெருவை சேர்ந்த ரவீந்திரன் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
* கொரட்டூர், தில்லை நகரை சேர்ந்த ராதா (37), என்பவரிடம் பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர்.

* திருவல்லிக்கேணி ஆலங்காத்தான் தெருவை ேசர்ந்தவர் வத்சலா (29). ஐகோர்ட் வக்கீல். நேற்று முன்தினம் மாலை வீட்டை திறந்து வைத்துவிட்டு உள் அறையில் வத்சலா இருந்துள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்குள் இருந்து வந்து வெளியே ஓடிவந்துள்ளார். இதைபார்த்த வத்சலா திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். பின்னர், வீட்டில் உள்ள பொருட்களை பார்த்தபோது டேபிள் மீது ைவத்திருந்த ஐ-போன் மாயமாகி இருந்தது.

* பள்ளிக்கரணை, பெரியார் நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சாரதி (26). இவரது மனைவி சிவானி. இருவருக்கும் ஐந்து மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. ஆடி மாதத்தை முன்னிட்டு சிவானி தனது அம்மா வீட்டுக்குச் சென்று விட்டார். சாரதி கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* ராயப்ேபட்டை, வடபழனி உளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ராயபுரம் மீனாட்சிபேட்டை 3வது தெருவை சேர்ந்த ராஜூ (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 சவரன் நகை பறிமுதல் ெசய்யப்பட்டது.

* மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையை சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மகன் விஜயகுமார் (26). மதுப்பழக்கத்துக்கு ஆளான இவர், கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த விஜயகுமார் நேற்று மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டார்.

* கே.கே. நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித்குமார் (19), என்பவரிடம் 2 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

* குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பவர் குடிப்பதை மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* சாஸ்திரி நகரில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 84 குவார்ட்டர், 24 பீர் பாட்டில்கள் மற்றும் ₹500 பறிமுதல் செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : young people,company,chopper,cut
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...