×

பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவு பூச்சி மருந்து குடித்து காதலர்கள் தற்கொலை

சென்னை: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எலுமிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்ராஜ் (19). இவர், பெரும்புதூர் அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (17). இவர், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர முயற்சித்து வந்தார்.

பிரதீப்ராஜும், சவுமியாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் இது காதலமாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி, ‘‘பெற்றோர் எதிர்ப்பை மீறி நாம் வாழ்கையில் ஒன்றாக சேர முடியாது, மரணத்திலாவது ஒன்று சேருவோம்’’ என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறி பாலாறு பகுதி சென்று பூச்சி மருத்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரின் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தேடியபோது, அவர்கள் பாலாற்று பகுதியில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் இருவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parents,lovers,suicide,drinking,pesticides
× RELATED குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை