×

போட்டியில்லை, நடுநிலை வகிப்போம் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வெல்லும்: திவாகரன் பேட்டி

மன்னார்குடி: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். தேர்தலின் ேபாது நாங்கள் நடுநிலை வகிப்போம் என மன்னார்குடியில் திவாகரன் கூறினார். அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நேற்று அளித்த பேட்டி:
தினகரன் தன்னிடம் குவிந்து கிடக்கும் பணத்தை வைத்து தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார். அது ஒரு போதும் பலிக்காது. தீமைகள் நிறைந்த தினகரன் அரசியல் களத்தை விட்டே அகற்றப்பட வேண்டிய நபர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளத்தான் கவலை படுகிறார். தமிழக நலனை காப்பதற்கு கவனம் செலுத்த மறுக்கிறார். தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்துள்ள தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம்.

கடந்த காலங்களில் அவருடைய பெருமைகளை சிலர் திட்டமிட்டு மறைத்துள்ளனர். நன்றி உள்ள ஒவ்வொரு தமிழனும் கருணாநிதிக்கு அவர் செயல்படுத்திய திட்டங்களுக்காக நன்றி தெரிவிக்க வேண்டும். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் நாங்கள் போட்டியிட மாட்டோம். தேர்தலின் போது நடுநிலை வகிப்போம். நாளையே தேர்தல் நடைபெற்றாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். இதுதான் கள /யதார்த்தம். சிலை கடத்தல் வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலுவிற்கு அரசு இடையூறு கொடுக்க கூடாது. மாறாக அவரது விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvarur, Thiruparankundram election, the DMK will win, tivakaran
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...