×

மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை

கடலூர்: கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அர்ச்சுனன். இவரின் 17 வயதான மனவளர்ச்சி குன்றிய மகள் சிறப்பு பள்ளியில் பயின்று வந்தார். கடந்த 17.6.2017 அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. தாயும், தந்தையும் கூலி வேலைக்கு சென்றுவிட மகள் தனியாக இருந்தார். பிற்பகலில் வீடு திரும்பிய பெற்றோர் அவரை தேடினர்.  அப்போது அர்ச்சுனனின் தொகுப்பு வீட்டில் வைத்து பாரதிதாசன்(29) என்ற வாலிபர், அர்ச்சுனன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அர்ச்சுனனை கண்டதும் அந்த நபர் தப்பியோடினார். இதுகுறித்து கடலூர் மகளிர் போலீசில் அர்ச்சுனன் புகார் அளித்தார். அதன் பேரில் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி லங்கேஸ்வரன் போக்சோ சட்டப்பரிவு(6)ன் கீழ் பாரதிதாசனுக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mentally retarded girl, raped, young, 29 years jail
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...