×

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை ஒழித்துக்கட்ட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை மனித சங்கிலி இயக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறது. இது தேசத்தின் அவமானம் என்று கருதப்பட வேண்டும்.  இதற்காக 15ம் தேதி (நாளை)  மாலை 4 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.  

பாலின நிகர்நிலையில் நம்பிக்கை கொண்ட, ஜனநாயகம் வேண்டும் என்று நினைக்கிற, மனித உரிமைகளைப் பற்றி நிற்கிற அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் இந்த மனிதச் சங்கிலியில் கரம் கோர்க்க வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women, Children, Violence, Tamilnadu, Human Chain Movement, Marxist Communist
× RELATED பொங்கல் திருநாள்!: தூய்மை பணிகளை...