×

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் அமித்ஷா ஆதரவு கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு அளித்து பாஜ தலைவர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து சட்ட ஆணையம் கடந்த மாதம் நாட்டில் அங்கீகாரம் பெற்ற அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கருத்தை கேட்க கூட்டம் நடத்தியது. பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் சட்ட ஆணையத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு சென்றது. அவர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கருத்தை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, 8 பக்கம் கொண்ட கடிதத்தை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் செலவு குறைவதோடு, ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் மனநிலை இருப்பது தவிர்க்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் என்பது திட்டம் அல்ல. முதன்மையாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parliament, State Legislative Assembly, at the same time, polls, Shah
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...