×

கருணாநிதி புகழுக்கு வணக்கம் தெரிவிக்கும் பொதுக்கூட்டங்கள்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் வரும் 17ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாலை 4 மணிக்கு  ‘கருத்துரிமைக் காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுநர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.

வரும் 19ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மாலை 4 மணிக்கு ‘முத்தமிழ் வித்தகர் கலைஞர்’ என்ற  தலைப்பில் இலக்கிய துறையினர் பங்கேற்கும் கூட்டமும், 25ம் தேதி கோவை இந்துஸ்தான் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ‘மறக்க முடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் மாலை 4 மணிக்கு கலைத்துறையினர் பங்ேகற்கும்  கூட்டமும், வரும் 26ம் தேதி மாலை 4 மணிக்கு திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி திடலில் ‘அரசியல் ஆளுமை கலைஞர்’ என்ற தலைப்பில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும், 30ம்  தேதி மாலை 4 மணிக்கு ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலிலும் நடக்கிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : General Meetings , Karunanidhi, DMK Chief ,Announcement
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...