×

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக செயற்குழு கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது: மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்

சென்னை: கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக திமுக செயற்குழு அவசர கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத் தில் நடைபெறுகிறது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை  தாங்குகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்  எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள். சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுற்ற நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டம் குறித்து திமுக பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்ட  அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 14-8-2018 செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். தலைமை செயற்குழு  உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunanidhi's death, DMK Executive, Meeting, MK Stalin presides
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...