×

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 10 பேர் காயம்

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மான்செஸ்டரில் நேற்று கரீபியன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவிழா முடிந்த சிலமணி நேரத்தில் அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதனால் திருவிழாவிற்காக கூடியிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதில் குழந்தைகள் இளைஞர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவில் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UK, Manchester, gunfire, Manchester carnival
× RELATED கொரோனாவுக்கு இந்தியாவில்...