×

பிலிப்பைன்ஸில் வினோதம்..... வெள்ளத்தில் மிதந்தபடி திருமணம் செய்த தம்பதி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் மூழ்கிய பேராலயத்தில் இளம் தம்பதிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யாகி புயல் உருவாகி பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புளாகான் மாவட்டத்தில் உள்ள 24 வயதான ஜோபல் டெலோஸ் ஏஞ்சலஸ் என்பவர் தண்ணீரில் மூழ்கிய பேராலயத்தில் திருமணம் செய்துகொண்டார். மணக்கோலத்தில் வெள்ளத்தில் மிதந்து வந்த தம்பதிகள் ஆலய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு வெள்ளநீரில் நடந்து சென்றனர். திருமணம் என்பது வாழ்வில் ஒரேஒரு முறை தான நடக்கும், மழை வெள்ளத்திற்காக அதை ஒத்திவைக்க கூடாது என மணமகன் ஜோபல் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Philippines, Wedding, monsoon rains, flooding,
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...