×

தைவானில் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து: 9 பேர் பலி; 15 பேர் காயம்

தைபே: தைவானில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். தைவான் நாட்டின் நியூ தைபே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.

மருத்துவமனையின் 7-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் இருந்த 206 நோயாளிகள் விரைவாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்து நிகழ்ந்தபோது அங்கு 32 நோயாளிகளும், 10 செவிலியர்கள் மற்றும் 8 இதர தொழிலாளர்கள் இருந்ததாக தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ஆம்புலன்ஸ் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்பார்வையிட்டு வருவதாகவும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taiwan, hospital, fire, fire department,
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...