×

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து..... 36 பேர் பலி; 50 பேர் காயம்

டமாஸ்கஸ்: சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர். சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரால் அங்கு வாழும் சுமார் 25 லட்சம் மக்களில் பெரும்பாலானோர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

இந்த மாகாணத்தின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா நகரில் அரசு ஆயுத கிடங்கில் நேற்று பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சியில் அருகாமையில் உள்ள இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை  ராணுவத்தினர் மீட்டனர். எனினும், 39 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அங்குள்ள போர் நிலவரங்களை பார்வையிடும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இது விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Syria, weapons depot, Idlib,
× RELATED கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில்...