×

சீனாவில் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழ இருந்த காரை மீட்கும் போலீசாரும், பொதுமக்களும்

சீனா: சீனாவில் சாலையின் நடுவே ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் விழு இருந்த கார் ஒன்றை போலீசாரும், பொதுமக்களும் மீட்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டில் ஷான்ஜி உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏராளமான விளை நிலங்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஏராளமான கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைபோல ஒதுங்கியுள்ளன.

இந்நிலையில் யானான் நகரில் கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது சாலையின் நடுவே 30 சதுர மீட்டர் அளவுக்கு பள்ளம் ஏற்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. 3 வதாக மற்றொரு காரும் பள்ளத்தில் விழ இருந்த நேரத்தில், அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் கயிற்றைக் கட்டி மீட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police and civilians,recover,car ,China
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...