×

கேஷியரிடம் ரூ.70 ஆயிரம் பறிப்பு

சென்னை: பெட்ரோல் பங்க் கேஷியரை சரமாரியாக தாக்கி, அவர் வைத்திருந்த ரூ. 70 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (46). செங்குன்றம், ஜிஎன்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், கேஷியராக பணிபுரிந்து  வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ரூ. 70 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.  வடகரை-மாதவரம் நெடுஞ்சாலையில் வந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் ஆனந்தனை திடீரென வழிமறித்தனர். பின்னர், அவரை சரமாரியாக தாக்கினர்.  இதில், பைக்கில் இருந்து ஆனந்தன் நிலைதடுமாறி, கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூ. 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு 4 பேரும் தப்பி  சென்றனர்.

* ஆவடியைச் சேர்ந்தவர் நிர்மலா (55) என்பவரின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க  முயற்சித்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதீஷ் (22), மேடவாக்கத்தைச்  சேர்ந்த முகமது இர்பான் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செயின்  பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

* ஆந்திராவை சேர்ந்த கிரண்குமார் (25), சோழிங்கநல்லூர் நியூ குமரன் நகரில் நண்பர்கள் 3 பேருடன் வாடகை வீட்டில் தங்கி, சாப்ட்வேர் நிறுவனத்தில்  இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது வீட்டுக்குள் புகுந்து  செல்போனை திருடிய சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அபிமன்யூ (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் இளையராஜா (31), மதுரவாயலில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரிடம் நேற்று  முன்தினம் இரவு கத்திமுனையில் ரூ. 3 ஆயிரம் பணம் பறித்த நொளம்பூரை சேர்ந்த சதீஸ்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cashier,Flush,arrest,
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...