×

தஞ்சை மாவட்டத்தில் இலவம் பஞ்சு மெத்தை விற்பனை ஜரூர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் இலவம் பஞ்சு மெத்தை விற்பனை அதிகரித்து வருகிறது.தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் இலவச பஞ்சு மெத்தைகள் அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலபோக்கில் தேங்காய் நார், பிளாஸ்டிக் பஞ்சை கொண்டு உருவாக்கிய  மெத்தைகளை பொதுமக்கள் பயன்படுத்த துவங்கினர். இந்த மெத்தையால் உடல்சூடு, கண்ணில் நீர் வடிதல், பல்வேறு சரும கோளாறு உண்டாவதால் தற்போது தேங்காய் நார், பிளாஸ்டிக் பஞ்சு மெத்தைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் மீண்டும் இலவம் பஞ்சால் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை பொதுமக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் இலவம் பஞ்சு மெத்தைகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.தஞ்சை காதிபவன் சர்வோதயா சங்கத்தில் இலவம் பஞ்சு மெத்தைகள் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது. இலவம் பஞ்சு மெத்தை ரூ.3,300 முதல் ரூ.4,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சை காதிபவன் சர்வோதயா சங்கம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு விரை மாதத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவம் பஞ்சு மெத்தைகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக ரூ.8 லட்சம் வரை விற்பனை  உயர்ந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tanjore , Cotton mattress, sale
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...