×

வட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: வானிலை மையம் அறிவுறுத்தல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 5 செ.மீ., தேவாலாவில் 4 செ.மீ., சின்னக்கல்லாரில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வரை காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Fishermen, weather center, Chennai, rain, puducherry
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...