* நோயாளிகளுடன் அலைக்கழியும் மக்கள்
* துணை முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தேனி : மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்து பெற்றும், தேனியில் அரசு மருத்துவமனை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் நோயாளிகளை அழைத்துக்கொண்டு அருகே உள்ள மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக சகல வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேனி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் கடந்த 1997ல் உருவானது. தலைநகரான பிறகு தேனி பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்தது. இதனால் இங்கு குடியேறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. கல்வியில் ஒரு பக்கம் அசுர வளர்ச்சி என தொடங்கி, வர்த்தகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரபல நிறுவனங்கள் தேனியை மையம் கொண்டு புதிய வர்த்தக நிறுவனங்களை தொடங்கி வருகின்றன. இதனால் தேனியில் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் அசுர வளர்ச்சியை தேனி தொட்டு வருகிறது.
நவீன மருத்துவமனை மாவட்ட தலைநகராக தேனி உருவாவதற்கு முன்னர், தேனியில் என்.ஆர்.தியாகராஜன் நினைவு அரசு மருத்துவமனை பழைய ஜி.எச்.ரோட்டில் இருந்தது. சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கடந்த 1969ல் துவங்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, நவீன மருத்துவ உபகரண வசதிகளோடு தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனை வளர்ந்து வந்தது. இம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.பல கோடி மதிப்பிலான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
2 ஆயிரம் பேர் சிகிச்சை என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனையில் சுமார் 200க்கும் அதிகமான நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றனர். நாள்தோறும் தேனி மற்றும் தேனியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் இங்கு வந்து புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுன்றனர். இதனால் இம்மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதிக்க தேவையான நவீன வசதிகளுடன் கூடிய எக்ஸ்ரே, ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கம், ரத்த சேமிப்பு நிலையம், பிரசவ சிறப்பு வார்டுகள், குழந்தைகள் சிறப்பு வார்டுகள், எலும்பு பிரிவு வார்டுகள் எராளமான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி கட்டிடங்களில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட்டது. இத்தனை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தேனி நகரின் மையப்பகுதியில் இருந்ததால் மக்கள் மருத்துவமனைக்காக எந்நேரமும் வந்து சென்றனர்.
புரட்டி போட்ட ‘2004’
புதர் மண்டிய அவலம்
பல கிமீ தூரம் பயணம்
‘மனநலமும்’ வரவில்லை
புதர் மண்டிய இடத்திற்கு புத்துயிர் தர வேண்டும்
இந்திய மருத்துவக்கழகத்தை சேர்ந்த மருத்துவரிடம் கேட்டபோது, ‘‘தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனை இடத்தை மனநல மருத்துவமனையாக மாற்றிட அரசு அறிவித்துள்ளது. எனவே, இம்மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் காலியாக கிடக்கும் மருத்துவமனை புத்துணர்வு பெறும்’’ என்றார்.
தேனியை சேர்ந்த வக்கீல்.சுரேஷ்குமார் கூறியதாவது, ‘‘தேனி நகர் மத்தியில் என்.ஆர்.டி.நினைவு அரசு மருத்துவமனை செயல்பட்டபோது ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள் சிகிச்சை பெற வசதியாக இருந்தது. இம்மருத்துவமனை இருந்தபோது, கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பயன் பெற்றார்கள். இப்போது காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மருத்துவமனை செயல்படும் என்பதும், அதிலும் ஒரேயொரு மருத்துவர் மட்டும் வந்து சிகிச்சையளித்து வருவது தேனி நகர மக்கள் தேவையை பூர்த்தி செய்யாது. இம்மருத்துவமனையில் மனநல மருத்துவமனை வரும் என்றார்கள். அதுவும் இதுவரை வரவில்லை. மனநல மருத்துவமனையை விரைவில் கொண்டு வருவதோடு, மனநல மருத்துவமனையுடன் பொது மருத்துவ பிரிவினை விரிவுபடுத்தி புதர் மண்டிக் கிடக்கும் மருத்துவமனை வளாகத்திற்கு, புத்துயிர் கொடுத்து சுகாதார வளாகமாக மாற்ற வேண்டும்’’ என்றார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!