×

சேலம், தருமபுரியில் லேசான நிலநடுக்கம்.... பொதுமக்கள் வீதியில் தஞ்சம்

சேலம் : சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில வினாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.

தருமபுரியிலும் நிலஅதிர்வு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. பெரும்பாலை ஏரியூர், சின்னம்பள்ளி, பழையூர், நல்லம்பள்ளி, ஏரியூர், கம்பை நல்லூர்  உள்ளிட்ட இடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Earthquake, Salem, Dharmapuri,
× RELATED மாமல்லபுரம் கண்காட்சி திடலில்...