சென்னை: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் சார்பில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமி மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங்-சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து, மக்காவ், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பாகிஸ்தான், போலந்து, கத்தார், சவுதி அரேபியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 28 உலக நாடுகளில் இருந்து 171 ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா சார்பில் 12 பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடரை சிறப்பான முறையில் நடத்துவதற்காக தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்திற்கு தமிழக அரசு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான காசோலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்க தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!