×

இந்தோனேஷியாவில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முதலைகள் அடித்துக் கொலை

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முதலைகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளன. மேற்கு பப்புவா  பகுதியில் ஆல்பர்ட் ஷியாகான் என்பவர் முதலைப் பண்ணை ஒன்றை நடத்தி வந்தார். இந்தப் பண்ணையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இரைபோடும் போது தவறி விழுந்ததால் அவரை முதலைகள் கடித்துக் கொன்றன. இதையறிந்த ஊர் மக்கள் ஆத்திரமடைந்து முதலைப் பண்ணைக்குள் புகுந்து சூறையாடினர்.  

பண்ணையில் இருந்த 300 முதலைகளை பிடித்து கத்தி, சுத்தியல், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்தும், வெட்டியும் கொன்றனர். இதையடுத்து அந்த முதலைப் பண்ணை மூடப்பட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...