×

இலங்கை அணி கேப்டன் பயிற்சியாளருக்கு தடை

துபாய்: கிரிக்கெட் விளையாட்டின் நெறிமுறைக்குப் புறம்பாக நடந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர்  சந்திகா ஹதுரசிங்கா, மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு 4 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை  விதிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீசுடன் கடந்த மாதம் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்கள் பந்தை  சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3வது நாள் ஆட்டத்தில் பங்கேற்க வராமல் இலங்கை அணியினர் தாமதம்  செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை குழு, கேப்டன் சண்டிமால், பயிற்சியாளர் ஹதுரசிங்கா, மேலாளர் குருசின்ஹா  ஆகியோர் 4 ஒருநாள் மற்றும் 2 டெஸ்டில் பங்கேற்க நேற்று தடை விதித்தது. இதனால் தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள்  தொடரில் சண்டிமால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...