×

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

தென்காசி: குற்றாலத்தில் மாலை மற்றும் இரவு வேளைகளில் சாரல் நன்றாக பெய்கிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பாதுகாப்பு வளைவைத்தாண்டி தண்ணீர் விழுகிறது. நேற்றும்  தண்ணீர் வரத்து குறையவில்லை. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது. பழையகுற்றால அருவியிலும் தண்ணீர்  வரத்து குறையவில்லை. இதனால் இரண்டாவது நாளாக நேற்றும் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி