×

குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலாதேவியை சென்னை அழைத்து செல்ல அனுமதி : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். குரல் மாதிரி பரிசோதனைக்காக இவரை, சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அனுமதிக்க கோரி சிபிசிஐடி தரப்பில், விருதுநகர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம், மதுரை மத்திய சிறையிலேயே குரல் மாதிரி எடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிசிஐடி டிஎஸ்பி  தாக்கல் செய்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குரல் மாதிரியை துல்லியமாக உறுதி செய்யும் வசதி சென்னையில்தான் உள்ளது என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலாதேவியை மதுரை ெபண்கள் சிறையில் இருந்து ஜூன் 27ல் (நாளை) சென்னை அழைத்து செல்ல வேண்டும். ஜூன் 28ல் மயிலாப்பூரிலுள்ள தடயவியல் துணை இயக்குனர் முன் அவரை ஆஜர்படுத்த வேண்டும். அங்கு  குரல் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். பின்னர் ஜூன் 29ல் மதுரை சிறையில் அடைக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...