×

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்மலா சீதாராமன், பிபின் ராவத் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பல்தால் மாவட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராணுவத் தளபதி பிபின் ராவத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காஷ்மீர் சென்றுள்ள மத்திய பாதுகாப்புதுறை மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்மாநில கவர்னர் என்.என்.வோஹ்ராவுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிற்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பல்தால் ராணுவ தளத்திற்கு நேரில் சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் ராணுவத் தளபதி பிபின் ராவத் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...