×

காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை விசாரணை

காரைக்குடி: காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணியன் தனது பணம் ரூ.40 லட்சம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் அவரது கார் ஓட்டுநர் நாராயணன் உள்ப்பட  மூன்று பேரை கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி அளவிற்கு இந்திய பணத்தையும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபர் சுப்ரமணியிடம் ரூ.40 லட்சத்திற்கு மட்டுமே கணக்கு இருந்த நிலையில் மீதமுள்ளதை ஹவாலா பணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கைப்பற்ற பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அங்கிருந்து அமலாக்கத்துறை பணத்தை பெற்று விசாரணையை மேற்கொள்ளும்  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...