×

சோழவரம் ஏரியிலிருந்து சென்னையின் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சோழவரம் : சென்னையின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக நீர் அனுப்பும் கால்வாயில் தண்ணீர் செல்லும் மட்டத்தை விட ஏரியின் நிர்மட்டம் குறைந்ததால் கடந்த மே மாதம் 5-ம் தேதியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை மூலம் ஏரிகளுக்கு கிடைக்கவேண்டிய நீரும் கிடைக்காததால் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சோழவரம் ஏரியிரிருந்து 3 ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீர் எடுக்கப்பட்டு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை