×

எம்டிஎம்சிக்கு சொந்தமான தாஜ் மான்சிங் ஓட்டல் அடுத்த மாதம் ஏலம்

* மூன்று நட்சத்திர தி கன்னாட் ஓட்டலை டாடா குழுமம் கடந்த வாரம் ஏலத்தில் எடுத்தது.
* இதேபோன்று ஏஷியன் இன்டர்நேஷனல் ஓட்டலை புளூம் ஹாஸ்பிடால்டி குழுமம் ஏலத்தில் நகராட்சியிடமிருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி: புதுடெல்லி நகராட்சிக்கு(என்டிஎம்சி) சொந்தமான தாஜ் மான் சிங்  நட்சத்திர அந்தஸ்துள்ள சொகுசு ஓட்டல் அடுத்த மாதம் 18ம் தேதி ஏலத்துக்கு வருகிறது. டெல்லியில் பிரபலமான தாஜ் மான்சிங் ஓட்டல்  டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனிக்கு (IHCL) சொந்தமானது. இது  புதுடெல்லி நகராட்சிக்குச் சொந்தமான  இடத்தில் கடந்த 33 ஆண்டுகளாக குத்தகைக்கு செயல்பட்டு வருகிறது. குத்தகை  காலம் கடந்த 2011ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனாலும், பல்வேறு காரணங்களைக்  கூறி தொடர்ந்து தற்காலிக குத்தகையாக அவகாசம் 9 முறை  நீட்டிக்கப்பட்டது. ஏலம் விடுவதற்கு வசதியாக  அந்த இடத்தை புதுடெல்லி நகராட்சி மதிப்பீடு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால், என்டிஎம்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், தங்களது ஓட்டல் நடவடிக்கைகளில் குறுக்கிட நிரந்தர தடை விதிக்க கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓட்டல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தனி நீதிபதி, குத்தகை நீட்டிப்பு கோரிக்கையை நிராகரித்ததுடன், உரிமத்தை புதுப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து இரு  நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏலம் விட  புதுடெல்லி  நகராட்சிக்கு அனுமதியையும் நீதிமன்றம் அளித்தது. இதை எதிர்த்து உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டது.

வழக்கில் இருந்த தடை நீங்கியதை அடுத்து, ஓட்டலை ஏலம் விட மாநகராட்சி இறுதி முடிவை மேற்கொண்டது. இந்த ஏலத்தில் இப்போதைய ஓட்டல் உரிைமயாளர் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனம் (ஐஎச்சிஎல்) மட்டுமே தாக்கல் செய்துள்ளது.  ஐடிசி தாக்கல் செய்த ஓப்பந்த விலைபுள்ளி தொழில் நுட்ப அடிப்படையில் தள்ளுபடியானது. மூன்றுக்கும் குறைவாக ஒப்பந்த புள்ளிகள் வந்துள்ளதால் ஏலம் ரத்தானது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த முயற்சியாக தற்போது மீண்டும் புதிய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக ஓட்டலை வாங்க விரும்புவோர் அதை இம்மாதம் 16ம் தேதி முதல் 22ம் தேதி பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஓட்டலை வாங்க விரும்புவோர்களின் கூட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்த புள்ளிகளை அடுத்த 9ம் தேதி வரை சமர்பிக்கலாம். ஏலம் 18ம் தேதி நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்