×

மாடம்பாக்கத்தில் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால் விபத்துகள் அதிகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம்தென் சாலை மப்பேடு சந்திப்பில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாததால் அப்பகுதியில் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மாடம்பாக்கம் பேரூராட்சியில் அகரம்தென் சாலை, வெங்கம்பாக்கம் சாலை, ஈஸ்டன் பைபாஸ் போன்ற சாலைகள் உள்ளது. இந்த சாலையில் மப்பேடு சந்திப்பில் இரு வளைவுகள் உள்ளது. இந்த வளைவில் இரவு நேரங்களில் வாகனங்கள் வேகமாக வந்து திரும்புவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதற்காக மாடம்பாக்கம் பேரூராட்சி, பதுவஞ்சேரி, மப்பேடு சந்திப்பில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு பல லட்சம் செலவில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அப்பகுதியில் ஓரளவு விபத்துகள் குறைந்தன.

இந்த விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியாமல் உள்ளதால், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் பேருந்து ஏற வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால், மீண்டும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்