×

எல்லைப் பகுதியில் ஆயுதம், போதைப் பொருள் கடத்தல் அதிகரிப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: எல்லைப் பகுதியில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் மியான்மர் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு  19 ஆயிரத்து 537 கடத்தல் சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், 2017ல் 31 ஆயிரத்து 593 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஆயிரத்து 501 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2016ல் ஆயிரத்து 893 ஆகவும், 2017ல் 2 ஆயிரத்து 299 ஆகவும் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED பிரதமர் மோடியின் நண்பர்களிடம்...