×

திருவெண்காடு கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சுவாமி தரிசனம்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நேற்று சுவேதாரண்யேஸ்வர் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை கோயில் அர்ச்சகர் ராஜாப்பா சிவாச்சாரியார் வரவேற்றார். பின்னர் அவர் சுவேதாரண்யேஸ்வரர், பிரம்மவித்யாம்பிகை, அகோரமூர்த்தி, புதன், துர்க்கை மற்றும் சவேதமகாகாளி உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிரசாதங்கள் வழங்கபட்டன. கிரிக்கெட் வீரர் அஸ்வினின் பெற்றோர் பிறந்த ஊர் திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை