×

ஏடிஎம்-களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

டெல்லி: ஏடிஎம் மெஷின்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்காத வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ஏடிஎம் மோசடி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.

ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுக்கான மென்பொருட்கள் நவீன படுத்தப்படாததும், போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணங்களால் மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி கருதுகிறது. எனவே மேம்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு வசதிகளை வரையறுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. இதனை வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி படிபடியாக அமல்படுத்தி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணியை பூர்த்தி செய்யவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...