×

கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை

ஹவானா: மத்திய அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று கியூபா சென்றடைந்தார். அங்கு பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை அந்நாட்டு அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இதனையடுத்து, முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். இதனையடுத்து அவர் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். இதனையடுத்து அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் அவர், அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றும் தகவல் வெளியாகியது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...