×

காவிரி நீரை பெற்றுத்தரக்கூடிய ஆட்சியாக திமுக இருந்தது: மு.க.ஸ்டாலின் உரை

திருச்சி: காவிரி நீரை பெற்றுத்தரக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் 3 திமுக தொண்டர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்ரீரங்கம் வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், நம் நாட்டில் காது குத்தும் ஆட்சியாளர்கள்தான் இருக்கிறார்கள். மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் நாட்டைப்பற்றியோ, மக்களை பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் காவிரிக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கருணாநிதி. கர்நாடகாவுடன் நட்புறவு வைத்து தேவைப்படும் நீரை பெற்று தந்தார் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் தற்போது 7 ஆண்டாகியும் காவிரியில் இருந்து தண்ணீரை பெற முடியவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றம் கூறியும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நியமிக்காத கர்நாடக முதல்வருக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் ஜீவாதாரத்தை கண்டுகொள்ளாத வகையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி முரணாக பேசி வருகிறார். காவிரி நீரை பெற்றுத்தர கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது. எனவே திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும். விரைவில் தேர்தல் வர உள்ளதால் நல்ல தீர்ப்பை மக்கள் பெற்று தர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும்


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின்...