ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனின் போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றதால் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடைந்தது. தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் புல் மைதானத்திற்குள் சென்று வந்ததால் புல் மைதானம் சேறும், சகதியுமாக மாறியது.
இதை அடுத்து புல் மைதானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!