×

பணகுடி அருகே பரபரப்பு ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு

பணகுடி: பணகுடி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வகுப்புக்கு வராமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பெண் ஆசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆசிரியர் அந்தோணிசாமி என்பவர் பெண்களை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வந்துள்ளார்.
இதற்கிடையில் 2 பெண் ஆசிரியர்கள் ஒரு ஆண்டாக பேறுகால விடுப்பில் உள்ளனர். ஆசிரியர் ஒருவர் இடமாறுதல் வாங்கிச்சென்று விட்டார். மொத்தம் உள்ள 9 ஆசிரியர்களில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.

இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.ஆனாலும் இதுவரை அந்த இடத்தில் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை.
இதற்கு கண்டனம்   தெரிவித்தும், உடனே ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் இன்று(21ம்தேதி) தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆசிரியர்கள் போடும் வரை மாணவர்களை அனுப்பமாட்டோம் என்று அவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணகுடி போலீசார் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை