×

பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க சென்னை பெண் சமூக ஆர்வலர் பள்ளம் தோண்டி போராட்டம்

ஆம்பூர்: விருதுநகரை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார்(45). இவர் தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றுக்கு நேற்று நர்மதா வந்தார். அங்கு மணல் கடத்தலை தடுக்கும் வகையில் பள்ளங்களை திடீரென தோண்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாத்தல், தூர் வாருதல் மற்றும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காக தனி நபராக போராடி வருகிறேன்.

அமைச்சர் வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாலாற்றில் மணல் திருட்டு நடத்தி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் இங்கு வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டேன். மணல் கொள்ளையை உடனடியாக நிறுத்தாவிட்டால், கொள்ளையர்களை இந்த குழியில் போட்டு புதைப்பேன். அதற்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவே இங்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.தகவலறிந்த உம்ராபாத் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் அங்கு வந்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...