×

காட்டு இலாகா மந்திரி என்பதால் காட்டுமிராண்டித் தனமாக பேசுகிறார் திண்டுக்கல் சீனிவாசன் : டிடிவி விமர்சனம்

விருதுநகர்: காட்டு இலாகா மந்திரி என்பதால் காட்டுமிராண்டித் தனமாக பேசி வருவதாக திண்டுக்கல் சீனிவாசனை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்களின் பேச்சு கேலி கூத்தாகிவிட்டது. கம்பருக்கும் சேக்கிழாருக்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சரும், அமைச்சராக்கியவரையே கொள்ளையடித்தவர் என்று கூறும் அமைச்சரும் இருக்கும் அரசை மக்கள் எப்படி மதிப்பார்கள் என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்ததாக கூறினார். இதே போன்று முதலமைச்சர் எடப்பாடியும் கம்பராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று உரையாற்றியதுடன், செய்தி குறிப்பும் வெளியிட்டிருந்தது. இதனையே டிடிவி தினகரன் தமது பேட்டியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய...